Home உலகம் ஈரானில் நிலநடுக்கம் – 3 பேர் மரணம்

ஈரானில் நிலநடுக்கம் – 3 பேர் மரணம்

453
0
SHARE
Ad

டெஹ்ரான் : இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாநிலத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “துரதிர்ஷ்டவசமாக இப்போது வரை மூன்று பேர் இறந்துள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளோம்” என்று தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

ஈரானிய ஊடகங்கள் நிலநடுக்கத்தின் வலிமையை 6.1 ஆகப் பதிவு செய்தன. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் இருந்ததாகக் கூறியது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் மையமிட்டு உருவானதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஈரானின் அண்டை நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு சிற்றரசுவிலுள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தனர்.