Home இந்தியா எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு

எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு

425
0
SHARE
Ad
எலிசபெத் ராணியாருக்கான அனுதாபப் புத்தகத்தில் திரௌபதி முர்மு கையெழுத்திடுகிறார்

புதுடெல்லி : மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு இலண்டன் சென்றுள்ளார்.

இந்திய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திரௌபதி முர்மு கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டு நிகழ்ச்சியாக எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் அமைந்திருக்கிறது.

பிரிட்டனின் இரண்டாம் அரசியான எலிசபெத் கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அஞ்சலிக்காகக் கொண்டு வரப்பட்டது. அங்கு லண்டனில் பிரிட்டன் நாடாளுமன்றம் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், திங்கட்கிழமை செப்டம்பர் 19-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள அரசியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் இலண்டன் வரத் தொடங்கியுள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இலண்டன் சென்றுள்ளார் முர்மு.