அவரின் ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக, அவர் இந்த வாரமே தன் பதவியில்இருந்து ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக புதிய காவல் துறைத் தலைவர் – ஐஜிபி -யார் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.
நாட்டின் 13-வது ஐஜிபியாக அக்ரில் சானி பதவி வகித்து வந்தார். 2021-இல் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு பதிலாக அக்ரில் சானி நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் கட்டாய பதவி ஓய்வு பெற வேண்டியிருந்தது.
இருப்பினும் அவரின் ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.