Home உலகம் இஸ்ரேல் மருத்துவமனைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்

இஸ்ரேல் மருத்துவமனைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்

309
0
SHARE
Ad

காசா – காசாவின் மருத்துவமனைகளில் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் மோசமான நிலைமைகள் காரணமாக கடுமையாக காயமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போராடி வருவதாக மருத்துவ உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

காசா நகரில் உள்ள அல் குத்ஸ் மருத்துவமனையின் அருகே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் வியாழன் (நவம்பர் 2) வரை தொடர்ந்தன என அதன் இயக்குனர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை தெற்கே செல்லுமாறு வலியுறுத்தி வருகிறது. கடந்த புதன் கிழமை (நவம்பர் 1)  இரண்டாவது முறையாக காசாவில் உள்ள மக்கள் நிறைந்த ஜபல்யா அகதிகள் முகாமில் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

#TamilSchoolmychoice

ஹமாஸ் கட்டுப்பாட்டு வளாகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதனன்று காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க அனுமதிக்கும் வகையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் மனிதாபிமான “இடைநிறுத்தத்திற்கு” ஆதரவளிப்பதாக கூறினார்.

காசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அனுமதியில், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் புதன்கிழமை ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் நுழையத் தொடங்கினர்.