Home இந்தியா சென்னையில் கடும் மழை – புயல் சின்னங்கள் – விமானப் பயணங்கள் ரத்து

சென்னையில் கடும் மழை – புயல் சின்னங்கள் – விமானப் பயணங்கள் ரத்து

286
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு தலைநகர் சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து, தமிழ் நாடு அரசுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை விமானம் நிலையம் அமைந்திருக்கும் மீனம்பாக்கத்தில் நிறைய அளவில் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பினால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2015-க்கு பிறகு இப்போதுதான் சென்னையில் அதிக அளவில் கனமழை பெய்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரட்டூர் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால்  அங்கிருந்த நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.

தொடர் மழை, வெள்ளம் காரணமாக, மீட்பு பணிகளுக்காக 4 பேரிடர் குழுவினர் தமிழகம் வந்திருக்கின்றனர்.