இதே நிகழ்ச்சியில் முன்னதாகப் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் மொழிப் பிரிவுக்கான துணை இயக்குநருமான வீ.செங்குட்டுவன், சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டிப் பயிற்சிப் புத்தகத்தை உருவாக்கியிருப்பதாகவும், சிலாங்கூர் மாநிலத்திற்கு மட்டும் என்றில்லாமல் நாடு முழுமையிலுள்ள எல்லா தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும் – அதனால் மாணவர்களும் பயனடைய வேண்டும் – என விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தப் புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவுகள்தான் இந்த முயற்சியை தொடர்வதற்கு தங்களுக்குத் தடையாக இருப்பதாகவும் செங்குட்டுவன் தனதுரையில் மேலும் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 தமிழாசிரியர்கள் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

