

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி வைத்தோம். அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளுக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் பயன்பாடுகளை கேட்டறிந்தோம்.