புத்ரா ஜெயா கீழமை நீதிமன்றத்தில் (மாஜிஸ்திரேட்) இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் ஒரு குறிப்பிட்ட அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட குத்தகைகளுக்காக கையூட்டுகள் பெற்றதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
2020, 2021-ஆம் ஆண்டுகளில் இந்த இரு நபர்களும் மில்லியன் கணக்கான ரிங்கிட் பணத்தைக் கையூட்டாகப் பெற்றனர் என்ற புகார்களின் அடிப்படையில் விசாரணைகள் ஊழல் தடுப்பு ஆணையத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.