Home இந்தியா பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு!

பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு!

315
0
SHARE
Ad
பொன்முடி

சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மீதான மேல்முறையீடு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் அமைச்சராக மீண்டும் நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார்.

இதன் தொடர்பில் ஆளுநர் கடிதம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் க.பொன்முடி – அவரது மனைவி விசாலாட்சி – ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து அவரின் திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பதவியையும் இழந்தார் பொன்முடி.

#TamilSchoolmychoice

இந்தத் தண்டனையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார். இந்நிலையில் அவரை, மீண்டும் அமைச்சராக நியமிக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாடு ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

ஆளுநரோ, புதுடில்லி சென்று சட்ட ஆலோசனை பெற்றார். அடுத்த ஓரிரு நாட்களில் பொன்முடி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக அவரை அமைச்சராக நியமிக்க முடியாது என ஆளுநர் முடிவெடுத்துள்ளார்.