Home நாடு படாத பாடு படும் ‘பாடு’

படாத பாடு படும் ‘பாடு’

196
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

புத்ரா ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லியின் சிந்தனையில் உருவாகி அறிமுகமான ‘பாடு’ (Padu) என்ற முதன்மைத் தரவுத் தளம் குறுஞ்செயலி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ரபிசி ரம்லியைப் பணித்துள்ளார்.

ஒரு சில அரசியல்வாதிகள், பாடு தரவுத் தளத் திட்டம் ரபிசி ரம்லியின் தோல்விக்கான அடையாளம் என சாடியுள்ளனர்.

மலாய்க்காரர் அல்லாதார் பெருமளவில் இந்த பாடு தரவுத் தளத்தில் பதிந்து கொள்ள முன்வரவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடுவில் பதிந்து கொள்ள மார்ச் 31 இறுதிநாள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 7.36 மில்லியன் மலேசியர்கள் மட்டுமே இதில் பதிந்து கொண்டுள்ளனர். எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை என அரசாங்கத் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

மிக அதிக அளவிலான தனிப்பட்டத் தகவல்கள் கோரப்படுவதால் பலரும் பாடுவில் பதிந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் பாடுவில் பதிந்து கொள்வதற்கான இறுதிநாள் நெருங்கும் நாட்களில் மிக அதிகமானோர் பதிந்து கொள்ள முன்வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.