Home நாடு “மகாதீர்தான் விசாரிக்கப்படுகிறார் – நாங்கள் அல்ல” – மகாதீர் மகன்கள் கூட்டாக அறிக்கை

“மகாதீர்தான் விசாரிக்கப்படுகிறார் – நாங்கள் அல்ல” – மகாதீர் மகன்கள் கூட்டாக அறிக்கை

172
0
SHARE
Ad
மிர்சான் மகாதீர்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு உட்பட்டவர்கள் தாங்கள் அல்ல என்றும் தங்களின் தந்தை துன் மகாதீரைக் குறி வைத்துத்தான் அந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் இரு மகன்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என டான்ஸ்ரீ மொக்சானி மகாதீர் மற்றும் மிர்சான் மகாதீர் இருவருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மொக்சானி மகாதீர்

“எங்கள் தந்தை துன் டாக்டர் மகாதீர் முகமட் எங்களின் செல்வத்தை வளப்படுத்த பிரதமர் பதவியை அதிகார விதி மீறலுக்குப் பயன்படுத்தினாரா என்பதை தீர்மானிப்பதே ஊழல் தடுப்பு ஆணையத்தின் இலக்கு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மேலும் பல ஆண்டுகளாக நாங்கள் சம்பாதித்ததெல்லாம் முறையான வழிகள் மூலமாக சம்பாதிக்கப்பட்டவை என்பதையும், எந்தக் குற்றத்தையும் நாங்கள் இழைக்கவில்லை என்பதையும் நிரூபிக்க விரும்புகிறோம்” என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.