Home நாடு சுங்கை பாக்காப் : ரபிசியும், சாம்ரியும் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்கின்றனர்!

சுங்கை பாக்காப் : ரபிசியும், சாம்ரியும் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்கின்றனர்!

160
0
SHARE
Ad
ரபிசி ரம்லி

ஜோர்ஜ் டவுன் : ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பிகேஆர் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லியும் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் சாம்ரி அப்துல் காடிரும் நியமிக்கப்பட்டுள்ளானர்.

ஒற்றுமை அரசாங்க செயலகத்தின் பொறுப்பாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுகி இந்தத் தகவலை வெளியிட்டார்.

இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற பக்காத்தான் ஹாரப்பான், தேசிய முன்னணி தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

சாம்ரி அப்துல் காடிர்
#TamilSchoolmychoice

சுங்கை பாக்காப் தொகுதியில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் நாளை புதன்கிழமை (ஜூன் 12) அறிவிக்கப்படுவார் என ரபிசி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும், 17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் 0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

காலமான நோர் சாம்ரி, நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.

சுங்கை பாக்காப் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்.