Home இந்தியா இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடையுமா? ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளால் பரபரப்பு!

இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடையுமா? ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளால் பரபரப்பு!

207
0
SHARE
Ad

புதுடில்லி : அதானி தொடர்புடைய வெளிநாட்டு நிதியில் (ஆஃப் ஷோர்) SEBI என்னும் இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியத்தின் தலைவருக்கு பங்கு இருப்பதாக ஹிண்டன்பர்க் என்னும் ஆய்வு மையம் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கையிலெடுத்துக் கொண்டு ஆளும் பாஜக அரசை சாடத் தொடங்கியுள்ளன.

இந்தியப் பங்குப் பரிமாற்ற வாரியத்தின் தலைவரான மாதபி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தலைவர் பொறுப்பை ஏற்கும் முன்னரே இந்த  முதலீடுகள் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு, அமெரிக்க முதலீட்டாளர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையை புச் தம்பதி “நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி” என்று கூறுகின்றனர்.ஹிண்டன்பர்க் குறிப்பிட்ட, “அதானி பங்கு கையாடல்” என்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிதியில் தாங்கள் செய்த முதலீடு, மாதபி செபியில் சேர்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டது என்று புச் தம்பதி தெரிவித்தனர்.