Home Photo News அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பில் பல முக்கிய முடிவுகள்!

அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பில் பல முக்கிய முடிவுகள்!

163
0
SHARE
Ad

புதுடில்லி-நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) தனது குழுவினருடன் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு இன்று அதிபர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரையும் அவரது குழுவினரையும் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அன்வாருடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.

அந்த சந்திப்புகளுக்குப் பின்னர் அன்வாரும் மோடியும் இணைந்து தங்களின் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர். மோடி இந்தியில் விளக்கமளிக்க, அன்வார் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

பின்னர் அன்வார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹாசானும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அன்வார்-மோடி பேச்சுவார்த்தையின் பலனாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

1. மலேசியாவுக்கு கூடுதலாக 200,000 மெட்ரிக் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை இந்திய ஏற்றுமதி செய்ய அனுமதி.

2.துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுர்வேதம் கல்வி குறித்த இருக்கை நிர்மாணிக்கப்படும்.

ஜெய்சங்கருடன் அன்வார்…

3. மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் பெயரிலான இருக்கை நிர்மாணிக்கப்படும்.

4. இந்தியா ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பியம் பெற மலேசியா ஆதரிக்கும்.

5.பிரிக்ஸ் என்னும் நாடுகளின் கூட்டமைப்பில் மலேசியா இணைத்துக் கொள்ளப்பட்ட இந்தியா ஆதரவளிக்கும்.

(இடமிருந்து – அன்வாரின் அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார், விக்னேஸ்வரன், தியோங் கிங் சிங், கோபிந்த் சிங் டியோ,தெங்கு சாப்ருல்)

6.இருநாடுகளுக்கும் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் அந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையை அந்த செயற்குழு சமர்ப்பிக்கும்.

7. செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஐடெக் என்னும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 மலேசிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும்.