பின்னர் அன்வார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹாசானும் கலந்து கொண்டார்.
அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:
1. மலேசியாவுக்கு கூடுதலாக 200,000 மெட்ரிக் டன் பாஸ்மதி அல்லாத அரிசியை இந்திய ஏற்றுமதி செய்ய அனுமதி.
2.துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரியில் இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுர்வேதம் கல்வி குறித்த இருக்கை நிர்மாணிக்கப்படும்.


3. மலாயாப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் பெயரிலான இருக்கை நிர்மாணிக்கப்படும்.
4. இந்தியா ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பியம் பெற மலேசியா ஆதரிக்கும்.
5.பிரிக்ஸ் என்னும் நாடுகளின் கூட்டமைப்பில் மலேசியா இணைத்துக் கொள்ளப்பட்ட இந்தியா ஆதரவளிக்கும்.


6.இருநாடுகளுக்கும் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் அந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களுக்குள் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையை அந்த செயற்குழு சமர்ப்பிக்கும்.
7. செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஐடெக் என்னும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 100 மலேசிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும்.