Home நாடு இந்தியத் தொழில் முனைவர்களுக்கு 4 மாதங்களில் 33.17 மில்லியன் நிதி – ரமணன் தகவல்

இந்தியத் தொழில் முனைவர்களுக்கு 4 மாதங்களில் 33.17 மில்லியன் நிதி – ரமணன் தகவல்

79
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2024 ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து நான்கு மாதங்களில், பேங்க் ராயாட்டின், இந்திய தொழில் முனைவோர் நிதியான பிரீஃப்-ஐ (BRIEF-i) திட்டத்தின் மூலம் மொத்தம் RM33.17 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சரான ரமணன், இந்த நிதி திட்டத்திற்கு மொத்தம் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2024 அக்டோபர் 14 ஆம் தேதிவரை போக்குவரத்து, சேவைகள், சில்லறை வணிகம், மற்றும் உணவு பானங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 384 தொழில் முனைவோர் பயன்பெறும் வண்ணம் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

பிரீஃப்-ஐ நிதி வழங்கும் நிகழ்ச்சியில் ரமணனுடன் அவரின் தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் (இடது கோடி) மற்றும் பேங்க் ராயாட், அமைச்சு அதிகாரிகள்…

“பிரீஃப்-ஐ போன்ற நிதி திட்டங்களின் தொடர்ச்சியுடன், மேலும் பல இந்திய தொழில் முனைவோருக்கு தங்கள் தொழில்களை வளர்க்க தேவையான நிதியை அணுகக் கூடியதாக ஆக்க அரசாங்கம் உறுதியாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என அவர் திங்கள்கிழமையன்று (அக்டோபர் 21) நடைபெற்ற பிரீஃப்-ஐ காசோலை வழங்கும் விழாவில் உரையாற்றும் போது கூறினார்.

#TamilSchoolmychoice

தொழில் முனைவோர் துறையில் முன்னேற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாகும், ஏனெனில் தொழில் முனைவோர் வேலைவாய்ப்புகளை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் தொழில் நுட்பத்தை முன்வைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியை அடைய அரசாங்கம் மற்றும் பேங்க் ராயாட் வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் நெருக்கமான ஒத்துழைப்பு தொழில் முனைவோருக்கு அவர்கள் வர்த்தக இலக்குகளை அடைய உதவ முக்கியமானதாகும் என்று ரமணன் கூறினார்.

“என் ஆலோசனை என்னவென்றால், விரைவாக விண்ணப்பிக்கவும். இந்த ஆண்டின் முடிவுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த முயற்சிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்… இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்,” என அவர் செய்தியாளர் சந்திப்பில் தொழில் முனைவோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.