Home உலகம் டிரம்ப்-மோடி வெள்ளை மாளிகையில் சந்திப்பு – முக்கிய முடிவுகள்!

டிரம்ப்-மோடி வெள்ளை மாளிகையில் சந்திப்பு – முக்கிய முடிவுகள்!

126
0
SHARE
Ad

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்தார்.

நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்ததாக மோடி தன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். ஆற்றல் உற்பத்தித் திறன், கல்வி, வணிகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல விவகாரங்களைத் தாங்கள் விவாதித்ததாக மோடி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

எனினும், மோடியின் எதிர்ப்பாளராக பாஜகவில் வலம் வரும் இந்திய நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா) உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்கனவே வழங்கியிருக்கும் சலுகைகள் தவிர்த்து – இந்த சந்திப்பின்வழி புதிதாக என்னென்ன சலுகைகளை வழங்கியது – என்பதைத் தெரிவிக்குமாறு மோடிக்கு சவால் விட்டார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்களைக் கைவிலங்கிட்டு, இராணுவ சரக்கு விமானத்தில் அமெரிக்கா திருப்பி அனுப்பியது இந்திய நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மோடி-டிரம்ப் சந்திப்பு அமைந்திருக்கிறது.