Home நாடு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும்!

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும்!

64
0
SHARE
Ad
அமரர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும்.

துன் ச.சாமிவேலுவின் பதவி விலகலைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிவேல், 2014 வரை அந்தப் பதவியை வகித்தார்.

நாளை புதன்கிழமை (ஜூன்18) காலை 9.00 மணி முதல்  இரவு 9.00 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் அவரின் நல்லுடல் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்:

#TamilSchoolmychoice

No: 3, Jalan Bangkung, Bukit Bandaraya, Bangsar, Kuala Lumpur

அன்னாரின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை ஜூன் 19-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்  தொடங்கி நடைபெறும். அதன்பின்னர் அன்னாரின் நல்லுடல் அவரின் இல்லத்திலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு கோலாலம்பூர் பண்டார் பாரு செந்தூலில் உள்ள இந்து மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:

014 6182324