மசீச கட்சியின் முன்னாள் தலைவர்களான டான்ஸ்ரீ லீ சான் சூன், டான் கூன் சுவான் மற்றும் முன்னாள் துணைத்தலைவர்களான டான்ஸ்ரீ லீ கிம் சாய் மற்றும் டான்ஸ்ரீ லிம் ஆ லேக் ஆகியோர் அடங்கிய குழு, இன்று பிற்பகல் 3 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர்களைச் சந்தித்து “ சொய் லெக் உடனடியாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்தலுக்குப் பிறகு , சுவா சொய் லெக் பதவி விலக வேண்டுமென்று அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கூறிவருவதால், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.