பொதுத் தேர்தல், மற்றும் லகாட் டத்துவில் நடந்த ஊடுருவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ஆணையத்தின் விசாரணை மே 29 வரை எட்டு நாட்களுக்கு கோத்தா கினபாலுவில் நடத்தப்படும் என அரச ஆணையத்தின் செயலாளர் டத்தோ சரிபுடின் காசிம் அறிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி நீண்ட நாளாக சர்ச்சையில் இருந்து வரும் சட்டவிரோத அடையாள அட்டைபிரச்சனை குறித்து விசாரிக்க அரச ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.
Comments