இவர்கள் மூவரும் மே 13 ஆம் தேதி நடந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டு ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து எதிர்கட்சியைச் சேர்ந்த சுமார் 100 ஆதரவாளர்கள் ஜிஞ்சாங் காவல் நிலையத்திற்கு முன் திரண்டு அவர்களை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட எதிர்கட்சித் தலைவர்களின் சார்பாக வழக்கறிஞர்கள் என்.சுரேந்தரன், ஆர்.சிவராசா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.