ஜூலை 22- இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இப்படி, கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக் கிறது.
ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது. இம்முடிவின் அடிப்படையில், வெப்ப மான நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்து விட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட் பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்து விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத் தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும் போது குளிரான காற்று உள்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப் படுகிறது என்கிறார்கள்.
கொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ. மேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட் டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் நிபுணர்கள்.