வாஷிங்டன், ஆக.2- அணு உலை பிரச்சினை காரணமாக ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது.
இதற்கிடையில் ஈரானுக்கு எதிராக தற்போது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்தது. இதற்கான மசோதா பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு 400-20 என்ற வாக்கெடுப்பில் நிறைவேறியது.
இதன்படி அமெரிக்கா இனி ஈரானுடன் சுரங்கம், கட்டுமானம் துறைகளில் ஒத்துழைப்பு வழங்காததுடன், 2015-ம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக அளவில் தடை செய்யப்படும். இந்த புதிய பொருளாதார தடையால் ஈரானுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என தெரிகிறது.