கொழும்பு, ஆக.6- சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் கட்டப்பட்ட கண்டெய்னர் டர்மினலை இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார்.
இந்த முனையத்தை நேற்று இலங்கை அதிபர் ராஜபக்ச திறந்து வைத்தார்.
இந்த முனையத்தை கட்டும் வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து தட்டிப் பறித்த சீனா, இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் வலுவாக காலூன்ற முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிக நோக்கத்திற்கு அப்பாற்பட்ட எவ்வித ராணுவ பயிற்சிக்கோ, ஒத்திகைக்கோ இந்த முனையத்தை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை துறைமுகங்களுக்கான ஆணையாளர் பிரியத் பண்டு விக்ரமா தெரிவித்தார்.