Home அரசியல் ம.இ.கா தேசியத்தலைவர் பதவிக்கான தேர்தல்: சுப்ரா போட்டியிடமாட்டார்! 2016 ல் பதவி விலகுவேன்! – பழனிவேல்...

ம.இ.கா தேசியத்தலைவர் பதவிக்கான தேர்தல்: சுப்ரா போட்டியிடமாட்டார்! 2016 ல் பதவி விலகுவேன்! – பழனிவேல் அறிவிப்பு!

522
0
SHARE
Ad

IMG_8661கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் பழனிவேலுக்கு எதிராக துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடுவாரா? இல்லையா என்ற கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ம.இ.கா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், “கட்சியின் தேசியத்தலைவருக்கான தேர்தலில் தனக்கு எதிராக சுப்ரா போட்டியிடமாட்டார்” என்று பழனிவேல் அறிவித்தார்.

இருப்பினும் தேசியத்தலைவர் பதவிக்கு வேறுயாராவது போட்டியிடக்கூடும் என்றும், அது யார் என்பது தற்போதைக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதோடு கட்சியின் தேசியத் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிருக்காது என்பதையும் பழனிவேல் அறிவித்தார். அதன்படி சுப்ரா தனது துணைத்தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வார் என்பது தெளிவாகிறது.

ஆனால் கட்சியின் தேசிய உதவித்தலைவர் பதவிக்கும், மத்திய செயற் குழுவுக்கும் போட்டியிருக்கும் என்று பழனிவேல் உறுதியளித்தார். மேலும் வரும் 2016 ஆம் ஆண்டோடு தான் பதவி விலகிக்கொள்ளப்போவதாகவும் பழனிவேல் அறிவித்தார்.

– பீனிக்ஸ்தாசன்

மேலும் விரிவான செய்திகள் தொடரும் …