தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, யாழ்ப்பாணத்தில் ஆளுநர் உட்பட பலதரப்பட்ட குழுவினரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரசித்தி பெற்ற யாழ் பொது நூலகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் ஆளுனர், மற்றும் அரச அதிகாரிகளை அவர் சந்தித்தார்.
அதேவேளை, நூலகத்துக்கு வெளியே இலங்கையில் காணாமல் போனவர்களை தேடும் உறவினர்களின் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு ஒன்றும் இத்தகைய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
நூலகத்தை நோக்கி செல்ல முயன்ற இவர்களை இலங்கை காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.
நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை இலங்கை அரசாங்கத்தின் சில பிரிவுகளும், சில சிங்கள சார்பு இயக்கங்களும் எதிர்த்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.