Home சமயம் இந்துகளின் மதமாற்றத்தைத் தடுக்க சமயப் பேரவை — டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தகவல்

இந்துகளின் மதமாற்றத்தைத் தடுக்க சமயப் பேரவை — டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் தகவல்

527
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர்,பிப்.12-  இந்துகளின் மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில்  வரும் மே மாதம் 12ஆம் தேதி சமய எழுச்சிப் பேரவை நடத்தப்பட்டும் என்று இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஆர்.எஸ்.மோகன்ஷான் தெரிவித்தார்.

அர்த்தமுள்ள தேவையான சமய மேம்பாட்டு காரியங்களுக்கு இந்து சங்கம் தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறினார்.

இந்த எழுச்சி மாநாடு வெற்றி அடைய அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற வேண்டுக்கோளையும் அவர் முன் வைத்தார்.

#TamilSchoolmychoice

மக்களுக்கும், சமயத்திற்கும் பயனளிக்கும் வகையில் நமது சேவைகள் அமைய வேண்டும். மேலும் நமது கலாச்சார விழாக்களை  குடும்பத்துடன் ஒற்றுமையாகக் கொண்டாட வேண்டுமே தவிர ஆடம்பர விழாவாகக் கொண்டாடுவதில்லை எந்த பலனும் இல்லை என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத்தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் கருத்துரைத்தார்.