Home கலை உலகம் இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார்

இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மோசடி புகார்

516
0
SHARE
Ad

honey ruth

சென்னை, ஜன 13 – இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது “வாயை மூடி பேசவும்” படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டு முன்பணம் வாங்கி விட்டு பிறகு இசையமைக்க மறுத்து விட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் குற்றம் சாட்டி உள்ளார்.

அனிருத் இசையமைக்க மறுத்ததால் அனிருத்துக்கு பதில் இப்படத்தில் ஷான் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். புகார் மனுவில் தங்களிடம் வாங்கிய முன்பணத்தை அனிருத் இன்னும் திருப்பி தரவில்லை என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.