Home இந்தியா மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக சார்பில் நால்வர் போட்டி! ஜெயலலிதா அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக சார்பில் நால்வர் போட்டி! ஜெயலலிதா அறிவிப்பு!

432
0
SHARE
Ad

Jayalalitha-300-x-200சென்னை, ஜனவரி 23 – நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல்களில் அஇஅதிமுக கட்சி சார்பாக நால்வர்போட்டியிடவிருப்பதாக தமிழக முதல்வரும் கட்சியின் பொதுச்செயலாளருமானஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தூத்துக்குடி நகரசபைத் தலைவர் சசிகலா புஷ்பா, நெல்லை நகரசபைத் தலைவர்விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன்மற்றும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சின்னத்துரை ஆகியோரேஅஇஅதிமுக சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் நால்வராவர்.

இந்தநால்வரும் திருநெல்வேலி மற்றும் அதன் பக்கத்து மாவட்டமான தூத்துக்குடியைச்சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஆதரவு

இதற்கிடையில் ஜெயலலிதா இன்று விடுத்த தனது அறிக்கையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை மாநிலங்களவைத் தேர்தலில் அஇஅதிமுக ஆதரிக்கும் எனவும்தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக தற்போது பதவிக் காலம் முடிவடைந்த டி.கே.இரங்கராஜனேமீண்டும் போட்டியிடுவார் என்று அறிவித்திருக்கிறது.

அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் இந்த ஐவருமே வெற்றி பெறும் அளவுக்கு சட்டமன்றத்தில் அஇஅதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இருக்கிறது.

திமுக சார்பில் அந்த கட்சியைச் சேர்ந்த திருச்சிசிவா போட்டியிடுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சட்டமன்றத்தில்எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தலைவர் விஜயகாந்த் மட்டும் இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.