Home இந்தியா ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைகாலத் தடை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைகாலத் தடை!

459
0
SHARE
Ad

Tamil-Daily-News_88448297978சென்னை, பிப் 27 –  ராஜிவ் கொலையாளிகள் நளினி, ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு இன்று  உச்சநீதிமன்றம் இடைகாலத் தடை விதித்தது.

மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். வரும் மார்ச் 6 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நளினி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைகாலத் தடை விதித்து மத்திய அரசு மனு மீது தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.