Home இந்தியா பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு!

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு!

481
0
SHARE
Ad

Tamil-Daily-News_5025446415ஸ்ரீநகர், மார்ச் 7 – கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடியன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள சுவாமி விவேகானந்தா சுபார்த்தி பல்கலைக்கழகத்தில் பயின்ற காஷ்மீர் மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 60 மாணவர்களை வெளியேற்றி தங்கும் விடுதியை காலி செய்ய சொன்னது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக வேந்தர் பி.கே.கார்க் கொடுத்த புகாரின் பேரில் மீரட் காவலர்கள்  தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.