Home கலை உலகம் விஜய் மற்றும் தனுஷுடன் இரவு பொழுதை கழித்துள்ளார் சிம்பு!

விஜய் மற்றும் தனுஷுடன் இரவு பொழுதை கழித்துள்ளார் சிம்பு!

508
0
SHARE
Ad

09-1394361933-simbu-hangs-out-with-vijay-and-dhanush1-600சென்னை, மார்ச் 10 – விஜய் மற்றும் தனுஷுடன் சிம்பு இரவு பொழுதை மகிழ்ச்சியாக கழித்துள்ளார். தனுஷும், சிம்புவும் இனி எதிரிகள் கிடையாது. ஒருவரை பார்த்தால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொள்ளமாட்டார்கள். இந்நிலையில் சிம்பு நண்பன் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இரவு பொழுதை கழித்துள்ளார். இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவுது.

என்ன ஒரு இரவு, விஜய் அண்ணா மற்றும் தனுஷுக்கு நன்றி என்று ட்விட்டரில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பரம எதிரிகள் நெருங்கிய நண்பர்களாக முடியும் என்றால் அது நானும், தனுஷும் தான் என்று தெரிவித்து சிம்பு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

தனுஷ் இளையதளபதி விஜய்யை சந்தித்து அவருடன் ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் கிசுகிசுக்கள் பற்றி பேசியதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். உக்ரம் என்ற கன்னட படத்தை தமிழில் படமாக்க தனுஷும், விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.