சில கட்சிகளுக்கு மட்டுமே இழுபறி நிலையில் காணப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இம்முறை காங்கிரஸ் கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு முன்வரவில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த தி.மு.க. கடந்த ஆண்டு இறுதியில் கூட்டணியில் இருந்து விலகியது. காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சந்தித்தும், தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடப்போவதாக மறைமுகமாக காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், ‘தமிழ்நாட்டில் இப்போதைய நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.