Home உலகம் டிஜிட்டல் வடிவில் ராமாயணம் 21-ஆம் தேதி வெளியாகிறது!

டிஜிட்டல் வடிவில் ராமாயணம் 21-ஆம் தேதி வெளியாகிறது!

507
0
SHARE
Ad

hunterலண்டன், மார்ச் 12 – இந்தியா, இங்கிலாந்து நிபுணர்களின் கூட்டு முயற்சியில் ராமாயண கதை, டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் நூலகம், இந்தியாவில் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வாஸ்து சங்கராலயா அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிபுணர்கள், இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிதறி இருந்த சுமார் 150 ஆண்டு பழமையான மேவார் ராமாயணத்தின் பிரதிகளை திரட்டினர்.

ஏற்கனவே மும்பையில் இருந்த வேல்ஸ் அருங்காட்சியகம் இவற்றை திரட்டி இருந்தது. இந்த மேவார் ராமாயணம் 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. கடந்த 1649-ஆம் ஆண்டு மேவார் அரசர் முதலாம் ரானா ஜகத் சிங் காலத்தில் ராமாயண பிரதிகள் முழுவதும் திரட்டப்பட்டு 400 அழகிய வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்களும் சேர்த்து எழுதும் பணி நடைபெற்றது.

பின்னர் இது பல்வேறு நாடுகளுக்கும் சிதறி விடவே தற்போது இதன் 80 சதவீத பக்கங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டது. மீதமுள்ள பக்கங்கள் பரோடா மியூசியம், ராஜஸ்தான் கல்வி மையம் ஆகியவற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு முழுமைபடுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதன் டிஜிட்டல் பிரதி வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மும்பை வந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவற்றை பார்த்து ஆச்சரியமடைந்து, டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.