Home இந்தியா வாக்கு பதிவு நாளான 24-ஆம் தேதி ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை!

வாக்கு பதிவு நாளான 24-ஆம் தேதி ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை!

373
0
SHARE
Ad

1412சென்னை, ஏப்ரல் 8 – தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வாக்கு பதிவு 24-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட),

உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ( தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் உட்பட)

#TamilSchoolmychoice

தேர்தல் நாளான 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனஅதில் கூறப்பட்டுள்ளது.