ஹாங்காங், ஷாங்காயில் அடுத்த மாதத்திற்குள் அக்கிளைகள் திறக்கப்படும்.
லாவோஸ் கிளை இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டுக்குள் திறக்கப்படும். அக்கிளையை ‘சி.ஐ.எம்.பி. தாய் வங்கி’ எனப்படும் தாய்லாந்து நாட்டின் சிஐஎம்பி வங்கியின் இணை நிறுவனம் திறக்கவுள்ளது என்று அந்த வங்கி குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ நசீர் ரசாக் (படம்) தெரிவித்தார்.
பிலிப்பைன்சில் சரியான வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த அவர் வியட்னாமிய அரசாங்கத்திடமிருந்து வங்கித் தொழில் உரிமத்தைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.