Home உலகம் “விடுதலைப் புலிகள் மீண்டும் அனைத்துலக ரீதியில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புதல்” – இலங்கை இராணுவம்

“விடுதலைப் புலிகள் மீண்டும் அனைத்துலக ரீதியில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புதல்” – இலங்கை இராணுவம்

489
0
SHARE
Ad

LTTE 440 x 215கொழும்பு, மே 10 – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் அனைத்துலக அளவில் இயங்குவதை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கையின் புலம்பெயர் அமைப்புகளோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை பயங்கரவாதம் தொடர்பில் அமெரிக்கா வெளியிடும் வருடாந்திர அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைக்கும் அனைத்துலகத்திற்கும் இப்போதும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது என்றும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, இலங்கை இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் சர்வதேச தொடர்புகள் மூலம் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவுடன் ஆயுதங்கள், நிதிகள் மற்றும் தேவைகளை பெற்றுவருவதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புலிகள் அவர்களின் செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கவும் நிதிகளை அனுப்பவும், அறக்கட்டளை நிதியங்களை முகப்பாக பயன்படுத்தி வருகின்றது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கும் முகாமாக வெளிநாடுகளில் இயங்கும் பல குழுக்களையும், தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் அண்மையில் பட்டியலிட்டுள்ளது.

இதுவரையில் கனடா மட்டுமே அந்தப் பட்டியலை ஏற்கப்போவதில்லையென தெரிவித்திருப்பது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக பொருள்படும் என்றும் ருவான் வணிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.