Home வாழ் நலம் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் கேரட்!

ஆண்மை சக்தியை அதிகரிக்கும் கேரட்!

4448
0
SHARE
Ad

Eveningஜூன் 1 – கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற  கொழுப்புகளை அகற்றலாம், குடல் புண்கள் வராமல் தடுக்கலாம். மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும்  அறிந்து கொள்வோம்.

கேரட்டின் பயன்கள்:

* உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது நல்லது. நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் ஜீரணத்திற்கு  உதவுகிறது. மாலைக் கண் நோயை தடுக்கும்.

#TamilSchoolmychoice

* ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்திச் செய்யவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் புண்கள் வராமல்  தடுக்கும்.

carrti* ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அதாவது பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு  வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

* கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து பயன்படுத்தினால் உடல்  வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும். உருளைக்  கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகும். எலும்புகள் உறுதியாகும்.

* கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள்,  களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும்.

* குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும். சருமத்திற்கு பொலிவையும், தலைச்சுற்றல், மயக்கம்  போன்றவற்றை தடுக்கும் ஆற்றலும் நிறைந்துள்ளது. கண் புகைச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக் கண் போன்றவற்றை குணமாக்கும்.

carrt* வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும். தரமான தாய்ப்பால்  தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தலாம். ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது.

* மூட்டுவீக்கம், வாத  நோய்கள் தீரும். மலட்டுத் தன்மையை மாற்றும் வைட்டமின் ‘ஈ‘ நிறைந்து காணப்படுகிறது. கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து  செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர குடல்புண், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை  கிடைக்கும்.

* கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. கேரட்டை  பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை  மறைந்துவிடும்.