Home உலகம் விண்வெளிக் குப்பைகளை நீக்க புதிய செயற்கைக்கோளை அனுப்ப ஐரோப்பா திட்டம்!

விண்வெளிக் குப்பைகளை நீக்க புதிய செயற்கைக்கோளை அனுப்ப ஐரோப்பா திட்டம்!

504
0
SHARE
Ad

space 23லண்டன், ஜூன் 3 – விண்வெளியில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் நவீன செயற்கைக் கோள் ஒன்றை அனுப்ப உள்ளது.

விண்வெளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் அபாயகரமான குப்பைகளை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து செயற்கை கோள் மூலம் பாதுகாப்பாக அகற்றும் முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்புத் திட்டத்திற்கு ‘இ-டிஆர்பிட்’ (e.DeOrbit) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளதாவது,

#TamilSchoolmychoice

“நூறு ஆண்டுகளாக விண்ணில் ஏவப்படும் விண்கலன்களில் இருந்து சிதறிய குப்பைகள் பூமியைச் சுற்றி ஒரு வளையமாக சுற்றி வருகின்றன. 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள், காபிக் கோப்பையை விட பெரிதாக காணப்படுகின்றன. இந்த குப்பைகளால் விண்வெளி பயணங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது.”

“குறைந்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றித்திரியும் உடைந்த செயற்கைக்கோள் பாகங்கள் போன்ற பெரிய அளவிலான பொருட்களை அகற்றி, அவற்றை மேல் நிலைகளுக்கு செலுத்துவதுதான் இந்த குப்பைகளை கட்டுப்படுத்துவதற்கான வழி. ”

“குப்பைகளை வலைகள் மூலம் பிடித்து 800 கி.மீ. முதல் 1000 கி.மீ. உயரத்துக்கு கடத்தி துருவ வட்டப்பாதையில் விடும் வகையில் இ.டிஆர்பிட் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பைகளை பிடிக்கும் பல்வேறு வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.” என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.