Home இந்தியா இமாச்சல் விபத்து: 5 மாணவர்களின் உடல்கள் மீட்பு! தேடுதல் வேட்டை தீவிரம்

இமாச்சல் விபத்து: 5 மாணவர்களின் உடல்கள் மீட்பு! தேடுதல் வேட்டை தீவிரம்

412
0
SHARE
Ad

gallerye_குலுமணாலி, ஜூன் 9 – இமாசலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலா சென்ற ஹைதராபாதைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 24 பேர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில்  5 மாணவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, “ஹைதராபாதைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள், இமாசலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் 6 மாணவிகள், 18 மாணவர்கள், மாண்டி அருகே உள்ள பியாஸ் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

rivarஅப்போது, அங்குள்ள அணையில் இருந்து பியாஸ் ஆற்றில் திடீரென தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 பேரும் இழுத்துச் செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.