ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நேற்று கூடிய 100 பேர், சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் ‘யெஸ்’ (YES) என்ற வார்த்தையை பிரதிபலிக்கும் வகையில் ஒன்று கூடிநின்றனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மூன்று பிரதான அரசியல்கட்சிகளும் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துசென்று சுதந்திர நாடாவதை எதிர்க்கின்றன.
அக்கட்சிகள், “ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராஜ்ஜியத்துடன் சேர்ந்தே இருக்குமானால் அப்பிராந்தியத்திற்கு தேவையான அதிகாரங்கள் கொடுக்கப்படும்” என்றும் கூறுகின்றன. மேலும், இங்கிலாந்தில் 21 சதவீத மக்களே ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.