Home வாழ் நலம் தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

658
0
SHARE
Ad

curry-leavesஜூன் 10 – நமது வாழ்கையில் தலைவலி, தலைச்சுற்றல் அடிக்கடி வரும். அப்படி  தலைவலி, தலைச்சுற்றல் வந்தால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. அதுதான் கறிவேப்பிலை தைலம்.

கறிவேப்பிலை தைலம் செய் முறை:

கறிவேப்பிலை – 200 கிராம்

#TamilSchoolmychoice

பச்சை கொத்தமல்லி – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

நல்லெண்ணை – 600 கிராம்

பசுவின் பால் – 200 மில்லி

KARUVABILAIகறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும்.

KARUஅதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம்.

தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளித்தால் தலைவலி, தலைசுற்றல் நீங்கி நிரந்தர நிவாரணம் பெறுவீர்கள்.