இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2009- ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். நடிப்பதையும் குறைத்தார்.
அதன் பிறகு கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட ரம்யாவுக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் அவர் தோல்வியடைந்தார்.
இதையடுத்து மாண்டியாவில் வசித்த வாடகை வீட்டை காலி செய்து விட்டு பெங்களூர் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். இதனை எதிர் கட்சிகள் விமர்சித்தன தேர்தலில் தோற்றதால் தொகுதியை காலி செய்து விட்டு ஓடிவிட்டார் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்தது. இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.
தோல்வியடைந்ததால் நான் அரசியலை விட்டோ தொகுதியை விட்டோ ஓடமாட்டேன். தொடர்ந்து மக்களுக்கு தொண்டு செய்வேன். எனக்கு எதிராக சிலர் பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள் என நடிகை ரம்யா கூறினார்.