Home கலை உலகம் புகைப்படம் எடுக்க வந்த மலேசிய ரசிகருக்கு விஜயகாந்த் பளார்!

புகைப்படம் எடுக்க வந்த மலேசிய ரசிகருக்கு விஜயகாந்த் பளார்!

611
0
SHARE
Ad

vijayakanth,கோலாலம்பூர், ஜூன் 21 – கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்த மலேசிய ரசிகர்ரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், ‘சகாப்தம்‘. இதற்கு இடம் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த்.

அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சுற்றிப்பார்த்த விஜயகாந்தும் அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

#TamilSchoolmychoice

பின்னர், ‘நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட புகைப்படம் எடுக்கணும்னா காலையில வாங்க‘ என்று பிரேமலதா அங்கிருந்த தமிழர்களிடம் சொன்னாராம்.

இதை கேட்டு குஷியான அவர்களில் 6 பேர், காலையில் ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, தங்கியிருந்த அறையை காலி செய்வதற்காக பிரேமலதா சென்றுவிட்டார். விஜயகாந்த்தும், மற்றொருவரும் வெளியே நின்றிருந்தனர்.

விஜயகாந்திடம் விஷயத்தைச் சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்ள  ஒப்புக்கொண்டார். இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் புகைப்படம் எடுத்தனர். பிறகு அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று புகைப்படம் எடுக்க முயன்றார்.

vijayakanthகடுப்பான அவர், ‘ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிக்கிட்டு இருக்கியா?’ என்று ஷாஜகான் கன்னத்தில் பளார் என்று ஒரு போடு போட்டார். இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள்.

‘ஏங்க இப்படி பண்ணுனீங்க?‘ என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், ‘இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா…? ஸாரி… ஸாரி… ஸாரி… போதுமா?‘‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே…‘ என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது இந்திய தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தியாகும்.