“ஈராக்கில் போரிட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின், தீவிரவாத சித்தாந்தம் இடைக்கால மற்றும் நீண்டகால அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக ஏராளமான திட்டங்களுடன் அங்கு பல குழுக்கள் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக நாம் இடைவிடாத கண்காணிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.”
“தற்போது, ஒரு நாட்டின் ஆளுமையை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நிலைகுலைய வைத்து வருவது தான் நமக்கு கவலையளிக்கும் பிரச்சனையாக உள்ளது. சிரியாவில் நடக்கும் போரிலும் பங்கேற்று வரும் இவர்கள் அந்நாட்டில் இருந்து அதிக ஆயுதங்களையும், வளங்களையும் கவரக் கூடும். ஈராக் நிலைகுலைந்துப் போனால், அந்த தாக்கம் ஜோர்டான் போன்ற நமது நேச நாடுகளுக்கு பரவக் கூடும்.”
“இத்தகைய தீவிரவாத குழுக்களை அழிக்க அவர்களை விட அதிக கூர்மையான, உரிய இலக்கு தொடர்பான திட்டமிட்ட போர் தந்திரத்தை நாம் கையாள வேண்டியுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.