Home இந்தியா கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58-ஆக உயர்வு! மீட்பு பணி நாளை மாலைக்குள் முடிவடையும்!

கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58-ஆக உயர்வு! மீட்பு பணி நாளை மாலைக்குள் முடிவடையும்!

506
0
SHARE
Ad

Search and rescue operation continues at the site of building collapse in Moulivakkam, near Chennaiசென்னை, ஜூலை 3– சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.

இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் குழுவினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நவீன கருவிகள், மோப்ப நாய்கள், கிரேன்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) 6–வது நாளாக மீட்புப் பணிகள் நடந்தது. நேற்றிரவு வரை மொத்தம் 77 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டவர்கள். 50 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

நேற்று மட்டும் 15 உடல்கள் மீட்கப்பட்டது. நேற்று யாராவது உயிருடன் இருப்பார்கள் என்ற எதிர் பார்ப்பு நிலவியது. ஆனால் நேற்று ஒருவர் கூட உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை.

epa04293964 National Disaster Response Force (NDRF) personnel (in orange jackets) gather at the site of a building collapse as search and rescue operation continues at Moulivakkam, near Chennai, India, 01 July 2014. The death toll in the building collapse has risen to 28 even as three persons were rescued alive out of the rubbles on 01 July. Rescuers pulled more survivors from the rubble of an 11-storey building that collapsed three days earlier in India's southern city of Chennai.  EPA/STRஇந்த நிலையில் இன்று காலை நடந்த மீட்புப்பணியில் மேலும் 5 உடல்கள் கண்டு மீட்கப்பட்டன. இதனால் கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை முதல் மதியம் வரை 8 உடல்கள் மீட்கப்பட்டன.

முதல் 3 நாட்கள் நடந்த மீட்புப் பணிகளில் கிடைத்த உடல்களையே அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் அழுகத் தொடங்கி விட்டன.

நேற்று முன்தினமே பெரும்பாலான உடல்கள் அழுகி, சிதைந்து, உருக்குலைந்து விட்டன. இதனால் கருப்பு பாலிதீன் பைகளில் கட்டி அவற்றை வெளியில் எடுத்து வருகின்றனர்.

இதுவரை 85 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 15 சதவீத இடிபாடுகளே அகற்றப் பட வேண்டியதுள்ளது. இறுதி கட்டமாக தரைத் தளம் பகுதியை அகற்றி விட்டால் மீட்புப் பணிகள் நாளைக்குள் முடிந்து விடும்.

அந்த தரைத்தளத்தில் தான் சுமார் 30 பேர் ஒரு அறையில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த 30 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

India-Building-Collaps30–க்கும் மேற்பட்ட உடல்கள் ஒரே பகுதியில் கிடப்பதாலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகி, உருக்குலைந்து, கூழாகி விட்டதாலும் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

இந்த துர்நாற்றம் மவுலி வாக்கத்தின் மற்ற பகுதிகளிலும் பரவி வருகிறது. இதனால் மீட்புக் குழுவினரும், விபத்து நடந்த பகுதி அருகே உள்ளவர்களும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் 6 நாட்களாக கிடப்பதால் அதிலிருந்து வெளியாகும் கிருமிகள் மூலம் விபத்து நடந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புக் குழுவினர் அனைவருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நோய் பரவல் இருப்பதற்கான மவுலிவாக்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மருந்து தெளித்து வருகிறார்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட துர்நாற்றம் நேற்று அதிகரித்தது. இன்று துர்நாற்றத்தின் தாக்கம், மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குன்றத்தூர் சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாதபடி துர்நாற்றம் இருப்பதால் அங்கு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

chennai-building_0மீட்பு படையினர் 2 ராட்சத கிரேன்கள் மூலமாக இடிபாடுகளை அகற்றி வருகிறார்கள். கட்டிடத்தின் பின் பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று அல்லது நாளை இரவுக்குள் முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளுக்குள் இதற்கு மேல் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவைகளை அகற்றும் பணி வேகமாகவே நடைபெற்று வருகிறது.

இருப்பினும் அழுகிக் கிடக்கும் உடல்கள் சிதைந்து விடாமல் இருப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு படையினர் பார்த்து பார்த்து தோண்டி வருகிறார்கள். உயிருடன் மீட்கப்பட்ட 27 பேருக்கும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.