பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேல் வாலிபர்கள் பலியானார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 13 நாட்களாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மலேசியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை உயிருடன் பிடித்திருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். எகிப்து விடுத்த போர் நிறுத்த அழைப்பை ஹமாஸ் அமைப்பினர் நிராகரித்த நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் உதவிகளை நாடியுள்ளார்.
எனவே தாக்குதலை நிறுத்தப் போவதில்லை‘ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி இன்று காலை எகிப்து விரைந்துள்ளார்.
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். காசாவில் தவித்த 4 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.