உலக அளவில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதும், பிற நாடுகளின் இராணுவம் மற்றும் தொழில்நுட்ப இரகசியங்களை உளவு பார்ப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் டெல்டா 4 எனும் ஏவுகணையை புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.
63 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை யுனைட்டட் ஏலியன்ஸ் மற்றும் லாக்கீட் அண்ட் போயிங் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்து தயாரித்து இருந்தன.
பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் வளம், வானிலை ஆய்வு, கடல்வளம், கல்வி வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா உளவு பார்ப்பதற்காக நவீன செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இருப்பது பிற நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.