ரத்த அணுக்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் குருத்தணு (ஸ்டெம் செல்) முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்த 10 நிமிடத்துக்குள் அதன் தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து அதனை பிரத்யேகமாக பாதுகாப்பதன் மூலம்,
எதிர்காலத்தில் அந்தக் குழந்தையோ, அதன் உறவினர்களோ ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்த அணுக்கள் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஸ்டெம் செல்லைக் கொண்டு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.
இந்நிலையில் குருத்தணு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில், ஸ்டெம் செல் வங்கியை லைப்ஃசெல் நிறுவனம் துவங்கியது. இதனை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பேசுகையில், நான் கர்ப்பமாக இருந்தபோது லைஃப்செல் நிறுவனத்தினர், ஸ்டெம் செல் தானம் தொடர்பாக என்னை அணுகினர். நான் எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து, தொப்புள்கொடி குருத்தணுவை தானமாகத் தர முடிவு செய்தேன்.
தமிழில் நல்ல கதை அமைந்தால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். எந்திரன் 2-டில் நடிக்க தயார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார் ஐஸ்வர்யா.