இது குறித்து அவர் “அட்லாண்டிக்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, அமெரிக்கா அதனை கண்டு கொள்ளவில்லை. இது மாபெரும் தவறாகும்.
நம்பகத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளை கொண்டுள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத உதவி செய்து அவர்களை திறன் வாய்ந்த போராட்ட சக்தியாக உருவாக்கியிருக்க வேண்டும்.
தற்போது இதே நிலை ஈராக்கிலும் நடை பெற்று வருகின்றது” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.