Home அவசியம் படிக்க வேண்டியவை கணினிகள் தயாரிப்பில் பயன்படுத்தி வந்த இரு இரசாயனங்களுக்குத் தடை- ஆப்பிள் அறிவிப்பு!

கணினிகள் தயாரிப்பில் பயன்படுத்தி வந்த இரு இரசாயனங்களுக்குத் தடை- ஆப்பிள் அறிவிப்பு!

392
0
SHARE
Ad

appleநியூ யார்க், ஆகஸ்ட் 15 – ஊழியர்களின் உடல் நலன் கருதி, கணினிகளின் தயாரிப்பில் பயன்படுத்தி வந்த இரு நச்சு இரசாயனங்களை தடை செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான ஆப்பிள், அவ்வபோது உலக சுற்றுச் சூழல் குறித்த எச்சரிக்கைகளிலும், அறிவிப்புகளிலும் மிகுந்த அக்கறை காட்டி வருவது வாடிக்கை.

அதேபோல் நிறுவன தயாரிப்புகளால் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த சில வருடங்களாக ஆப்பிள் கணினிகளின் தயாரிப்பில் ‘பென்சேன்’ (benzene) மற்றும் ‘என்-ஹெக்சேன்’ (n-hexane) பயன்படுத்தி வருவதாக  பெரும் சர்ச்சையை ஏற்பட்டு வந்தது.

apple-logo-blueஇந்த இராசாயனங்களைப் பயன்படுத்துவதால் ஊழியர்களின் நரம்பு மண்டலம் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்பட்டது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆப்பிள் அந்த நச்சு பொருட்களை கணினிகளின் தயாரிப்பில் பயன்படுத்துவதை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

இது பற்றி அந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் துணைத்தலைவர் லிசா ஜாக்சன் கூறுகையில், “சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் எங்களின் தலைமைப் பண்பை காட்ட இது சரியான தருணம். இனி கணினிகளின் தயாரிப்பில் பாதுகாப்பான இரசாயனங்களே பயன்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.